முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் ஒருமைப்பாட்டை பலப்படுத்த கவர்னர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சனிக்கிழமை, 14 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்துவதற்கு ஆளுநர்கள் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில கவர்னர்களின் மாநாடு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 2 நாட்களாக நடந்தது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நிறைவுறையாற்றினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது,

“யோசனைகளிலோ வளங்களிலோ, திறமையிலோ இந்தியாவில் பற்றாக்குறை இல்லை. இருந்தாலும் சில மாநிலங்கள் பின் தங்கியிருப்பதற்கு அங்குள்ள ஆட்சி முறையில் உள்ள குறைபாடுகளே காரணம். நல்ல ஆட்சிமுறை இருக்கும் மாநிலங்களில் மக்களுக்கு பயன்தரும் பல்வேறு நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்திரதனுஷ் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் சிறப்பாக செயல்பட கவர்னர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்த கவர்னர்கள் பங்காற்ற வேண்டும். ‘ஒரே இந்தியா’ போன்ற அரசின் முன்முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கவர்னர்கள் பங்காற்ற வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து