முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

சனிக்கிழமை, 14 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஷ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 22-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. சமீப காலமாக இந்திய அணி வெகு சிறப்பாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் விளையாடி அபார வெற்றிகளை பெற்று வருகிறோம்.

இதற்கிடையே, நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜடேஜா, அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, ரஹானே,மணிஷ்பாண்டே, கேதர்ஜாதவ், ஹர்திக்பாண்ட்யா, அக்ஸர்பட்டேல், குல்தீப்ஜாதவ், சாஹல்,பும்ரா,புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஷகிர்தவான், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அணியில் மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து