முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்திட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு:

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்திடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நான்கு வழிச்சாலை காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகேயுள்ள நிலத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார்.
தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாகத் திகழ்ந்திடும் திருமங்கலம் நகரில் தற்போதுள்ள புறநகர் பேருந்து நிலையம்,திருமங்கலம் நகர் காவல் நிலையம் எதிரில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதையடுத்து திருமங்கலம் நகரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைத்திடுவதற்கான இடத்தை உடனடியாக தேர்வு செய்திடுமாறு அண்மையில் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து திருமங்கலத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்திடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.அதில் திருமங்கலம் நான்கு வழிச்சாலை அருகே காட்டுப்பத்திரகாளி கோயில் பகுதி,கப்பலூர் ரிங்ரோடு அருகிலுள்ள பகுதி மற்றும் சில இடங்கள் திருமங்கலம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைத்திடுவதற்காகன பட்டியலில் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு இது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைத்திடும் பணிகளின் ஒருபகுதியாக திருமங்கலம் நான்கு வழிச்சாலை காட்டு பத்திரகாளி கோவில் அருகிலிருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பார்வையிட்ட இடத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது பேருந்து நிலையம் அமைப்பதற்காக கூடுதலாக தேவைப்படும் நிலங்களின் விபரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன்,உசிலம்;பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர்சரஸ்வதி,பொறியாளர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகாணி மகாலிங்கம்,கல்லுப்;பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம்,அவைதலைவர் ஜஹாங்கீர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து