முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை வெள்ள முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செயல் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - வத்தலக்குண்டு அருகே அணைப்பட்டியில் வடமேற்கு பருவமழை வெள்ள முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தீயணைப்பு துறையினர் வருவாய்துறையினர் முன்னிலையில் பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு தீயணைப்பு துறை சார்பாக நடந்த பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவவர் ஜோசப் தலைமை வகித்தார். நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலாகிரேஷ் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் அருளானந்தம் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு வெள்ளம் வரும் போது எவ்வாறு தப்பிப்பது என்பது உள்பட பல்வேறு வெள்ள பாதுகாப்பு செயல் விளக்கங்களை செய்து காட்டினர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சரவணமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார். நிலக்கோட்டை, வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை பார்த்து பொதுமக்கள் ஏராளமானோர் பயனடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து