முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத் துறையில் இந்தியா சுயசார்பு நாடாகும் - மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே நம்பிக்கை

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஜபல்பூர் : ராணுவத் துறையில் இந்தியா சுயசார்புடைய நாடாக விளங்கும் என்று ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே கூறியதாவது:

நமது நாட்டை சுயசார்புள்ள நாடாக உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சி செய்கிறது. இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். ராணுவ தளவாடங்கள், வெடி பொருட்கள் உற்பத்தியிலும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் இந்தியா சுய சார்புள்ளதாக வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.

ராணுவத் துறையில் இந்தியா சுயசார்புடைய நாடாக விளங்கும். 2019 முதல் ராணுவத்துக்கு வழங்கப்படும் வெடிபொருட்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள் தரமானவையாக இருக்கும். இவ்வாறு சுபாஷ் பாம்ரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து