முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன் - விசாரணை 23-ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தின் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க கோரிய தினகரன் அணி கோரிக்கையை தேர்தல் ஆணையம்  நிராகரித்தது.

பத்திரங்கள் தாக்கல்

அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணி தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் கெடு விதித்தது. இதற்காக எடப்பாடி, ஓ.பி.எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், சி.எஸ் வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆஜராகினர். டி.டி.வி.தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர் அஸ்வினிகுமார் வாதாடினார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு

இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க டி.டி.வி.தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்தது. எனினும் அந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான தீர்மான நகலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பினர் கடந்த 6-ம் தேதியே வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரினர். அதே நேரத்தில் தினகரன் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

கோரிக்கை நிராகரிப்பு

இந்த நிலையில் அணிகளின் தரப்பு வாதங்களைக் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கடந்த 13-ம் தேதி தினகரன் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா பணி நிமித்தம் காரணமாக ஆஜராகவில்லை. அதனால் அந்த வழக்கு நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பில் போலி கையெழுத்துடன் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டினர். நேற்றைய விசாரணையில் அமைச்சர்கள் சண்முகம், ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு தரப்பினர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கானது வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து