எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்று சென்னையில் நேற்று காவலர் நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பணி நியமன ஆணை
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 46 காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையை சேர்ந்தவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்து தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி, தனது சிறந்த நிர்வாகத் திறமையால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டைமுதன்மை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா. `அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தின் வழிகாட்டுதலின்பேரில் அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
சிறப்பான முறையில்...
தமிழ்நாடு காவல்துறை தனிப்பெருமையோடு சிறப்பாக பணியாற்றி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும், தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இயற்கைப் பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
பணியிடம் நிரப்பு
சிறைத் துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர். இருப்பினும், காவலர் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இன்னும் சிறப்பான பாதுகாப்பை பொதுமக்களுக்கு கொடுக்க முடியும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள்.
காவலர்கள் தேர்வு
சீருடைப்பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா நவம்பர் மாதம் தொடங்கினார்கள். இது மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் இன்று வரை நம்மையெல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரெண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலைக்கூட்டத் தொடரில் நான், காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே பதினைந்தாயிரத்து அறுநூற்று இருபத்தொன்று (15,621) நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2-ம் நிலை காவலர்
இவற்றில், ஆயுதப்படைக்கு ஆறாயிரத்து நான்கு (6004) இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், இரண்டாயிரத்து ஐநூற்றுஅறுபத்தி நான்கு (2564) இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு நாலாயிரத்து ஐநூற்று அறுபத்தேழு (4567) இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், ஐந்து (5) பெண் காவலர்களும் என மொத்தம் பதிமூன்றாயிரத்து நூற்று நாற்பது (13,140) இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தேர்வு
மேலும் சிறைத்துறைக்கு தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கு (954) இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், முப்பத்தாறு (36) இரண்டாம் நிலைபெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து நானூற்று தொண்ணுற்று ஒன்று (1491) தீயணைப்பு வீரர்கள் எனமொத்தமாக பதினைந்தாயிரத்து அறுநூற்றி இருபத்தி ஒன்று (15,621) நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலமாக தமிழ்நாடு காவல் துறையில் காலி பணியிடங்களே இல்லை என்கிற உயரிய நிலையை உருவாக்கி தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பை இவ்வுலகே வியக்கும் வண்ணம் உயர்த்துவதே ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசின் நோக்கமாகும்.
பணியாற்ற வாய்ப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக 1992-ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு பெண் காவலர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுஎன்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன. தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டியகடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும். இப்படிப்பட்ட சிறப்புமிகு தமிழ்நாடு காவல்துறையில் உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பெருமை அளிப்பதாகும்.
இதனை எந்நாளும் நினைவில் கொண்டுநீங்கள் உங்கள் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செவ்வனே செய்ய வேண்டும். சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டிவரும்.
உங்கள் சொந்த இல்லம்
``ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்’’ என்ற எம்.ஜி.ஆர்.பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அம்மாவின் அரசு உங்கள் சொந்த இல்லம் ’’திட்டத்தின் கீழ் சீருடைப் பணியாளர்களுக்கென வீடுகள்கட்டிக் கொடுத்து வருகிறது. சென்னை வண்டலூருக்கு அருகில் மேலக்கோட்டையூரில் வீடுகள் கட்டிக் கொடுத்தது போல, கீழக்கோட்டையூரிலும் வீடுகள் கட்டிக் கொடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதே போல, பிற மாவட்டங்களிலும் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தன்னல மற்ற சேவை
பூவை பார்த்து ஒரு குழந்தை கேட்டது, உன்னை பறிக்கும் போது மலர்ந்த முகத்துடன் மணம் வீசுகிறாயே எப்படி என்று.... அதற்கு மலர் சொன்னது பறித்தவர் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்த்து எனது வலியெல்லாம் மறந்து போகிறது என்று..... காவல் பணியும் அதுபோல தான், நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னல மற்ற சேவை. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும்.
இன்று பணி நியமனம் பெற்றுள்ள உங்கள் கடமைக் கரங்கள் எதிர்காலத்தில் பதக்கங்கள் பலகுவிக்கும் திறமைக்கரங்களாக திகழ வேண்டும் என உளமாற வாழ்த்துகிறேன். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தி உங்களை எல்லாம் தேர்வு செய்த சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர், வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.