முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் தாக்குதல்: 43 ராணுவ வீரர்கள் பலி

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 43 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறியதாவது, "ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் கந்தஹார் மாகாணத்திலுள்ள மைவாண்ட் மாவட்டத்தில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது நேற்று  தாலிபன் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் முகாமிலிருந்த 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் தவ்லத் வாசிரி கூறியபோது, "தாலிபன்கள் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அங்குள்ள நிலைமையை கண்காணிக்க ராணுவ குழு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
ஆப்கானில் ராணுவ முகாம் மீது இந்த வாரத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது தற்கொலைப்படை தாக்குதல் இது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து