முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிறுவனுக்கு மருத்துவ விசா வழங்க மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு விசா வழங்குமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த காஷிப் என்பவர் கூறியதாவது, "எனது மகன் அப்துல்லாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருடைய மருந்துகள் தீரும் தருவாயில் உள்ளன. நான் இந்தியாவுக்கு வந்தால் மட்டுமே மருத்துவ ஆலோசனைப் பெற்று மீண்டும் மருந்துகள் வாங்க முடியும்" என்று தனது ட்விட்டரில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளினை ஏற்ற சுஷ்மா சுவராஜ், "உங்கள் குழந்தை மருந்து பற்றாக்குறையால் அவதிப்படக்கூடாது. பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மருத்துவ விசா ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்" என பதில் அளித்தார்.

மற்றுமொரு ட்வீட்டில், "பாகிஸ்தான் பெண் ரஃபீக் மேமன் இந்தியாவில் கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது" என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு இடையேயும் அண்மைக்காலமாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ விசா வழங்குவதில் சுஷ்மா சுவராஜ் கருணை காட்டி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து