முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: அடுத்த வாரம் 27-ந்தேதியில் இருந்து நவம்பர் 7-ந்தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்இந்திய துணைக்கண்டத்தில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை என இரு பருவ காலங்களில் நல்ல மழை பெய்யும். தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி அக்டோபர் 2-வது வாரம் வரை நீடிக்கும். இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்யும். மற்ற இடங்களில் வடகிழக்கு பருவ மழையால்தான் மழை பெய்யும். இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மேற்கு மாவட்டங்கள் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் குடிநீர் பிரச்சினை சமாளிக்கப்பட்டது. தென் மேற்கு பருவமழை கர்நாடகம், ஆந்திராவிலும், நன்கு பெய்ததால் காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளிலும் வெள்ளம் ஓடுகிறது.
 
மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை தொடும் நிலையில் கிருஷ்ணகிரி, ஓசூர், சாத்தனூர் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்த நிலையில் வங்க கடலிலும், அரபிக்கடல் பகுதியிலும் மேற்கு பருவ மழை படிப்படியாக குறைந்தது. தற்போது தென்மேற்கு பருவ மழை ஓய்ந்து விட்டது. அடுத்த வாரம் 27-ந்தேதியில் இருந்து நவம்பர் 7-ந்தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பின்பு காற்றழுத்த தாழ்வு நிலைகள் மற்றும் புயல்களால் சென்னை மற்றும் தமிழகத்துக்கு அதிக அளவு மழை கிடைக்கும். சில தனியார் அமைப்புகள் கடந்த வாரமே சென்னையை புயல் தாக்கும், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மழை பெய்து விற்பனை பாதிக்கும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிட்டன.

ஆனால் தனியார் வானிலை அறிக்கைகள் தவறாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து