முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு கொசு புழுக்கள் இருந்த 3 புதிய கட்டிடத்திற்கு ரூ.30000 அபராதம்: ஆணையாளர் அனீஷ் சேகர் நடவடிக்கை

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.    ஆய்வு மேற்கொண்டார். 
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அனுப்பானடி ஹவுசிங் போர்டு செக்டார் 6 பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக அபேட் மருந்து தெளித்தல், கொசு புகை மருந்து பரப்புதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வாய்க்காலை சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்குவால் பாதிக்கப்பட்ட வீட்டில் ஆய்வு செய்த போது அங்கு பிடித்து வைத் ்து குடிநீரில் அனைத்திலும் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்து உடனடியாக அகற்ற உத்தரவிட்டு அந்த வீட்டில் உள்ள நபர்களிடம் தண்ணீரை மூடி பாதுகாப்பாக வைக்குமாறு அறிவுரை கூறினார். மேலும் மதர் தெரசா பள்ளியில் ஆய்வு செய்த போது அப்பள்ளியில் உள்ள மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி, வகுப்பறைகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீரையும் ஆய்வு செய்தார். மேலும் ரவுண்டானா தெருவில் புதிதாக கட்டப்படும் வரும் 3 தனி வீடுகளில் ஆய்வு செய்த பேர்து அந்த கட்டிடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரிலும், தண்ணீர் சேமிப்பு தொட்டியிலும் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த 3 கட்டிட உரிமையாளரை அழைத்து ஆணையாளர் முன்னிலையில்  நோட்டீஸ் வழங்கி தலா ரூ.10000 வீதம் 3 கட்டிடங்களுக்கு ரூ.30000 அபராதம் விதிக்கப் பட்டது.
 அதனைத் தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஆய்வு மேற்கொண்டு தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் பிடித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறிப்பட்டு அதில் உடனடியாக அபேட் மருந்து மற்றும் புகை பரப்ப சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் கோ.புதூர் லூhர்து நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வாய்க்காலில் தேங்கியிருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை மாநகராட்சி ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணியினை பார்வையிட்டார். லூhர்து நகர் கிழக்கு மெயின் ரோட்டில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீடாக டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். லூhர்து நகர் 7 வது தெருவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு சென்று நோயின் தன்மை குறித்து கேட்டறிந்து அந்த வீட்டின் மாடியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியினை ஆய்வு செய்து சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார். மேலும் லூhர்து நகர் கிழக்கு மெயின் ரோடு, 7 வது தெரு பகுதியில் உள்ள பொது மக்கள் ஓரே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு ஏற்படும் காரணத்தினால் அந்த இடத்தில் புதிதாக டம்பர் பின்களை வைக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள்;  ரமேஷ்,  பழனிச்சாமி, உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், செயற்பொறியாளர்கள்  சந்திரசேகரன்,  ராஜேந்திரன், சுகாதார அலுவலர்கள்  நாகராஜ்,  சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து