முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவர் ஆயுள் நீடிக்க பெண்கள் கௌரி விரதம்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

தேனி - பெண்கள் தங்களின் கணவர் உடல்நலத்துடன் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று கௌரி விரதம் தொடங்கினர். மஞ்சள் பொடியிலேயே கௌரி அம்மனை உருவகப்படுத்தி, அம்மனுக்கு மூங்கில் தட்டில் அரளிப்பூ, அரளி இலை, காதோளைகருகமணி, தாலிக்கயிறு வைத்தும், நெய்வேத்தியமாக நெய் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை படைத்தும், அம்மனை அலங்கரித்து தங்களின் மாங்கல்ய பாக்யம் நிலைக்க வேண்டுமென்று அம்மனை வேண்டுவர்.  தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று பின்னர் நாளை மாலை அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்விரதத்தை பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் கடைபிடித்து வருவர். இவ்விரதத்தை அல்லிநகரம் வடக்கு தெரு, பெரியகுளம் வடகரை பகுதியில் ஏராளமான பெண்கள் கடைபிடித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து