முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி திருநாளை முன்னிட்டு மனநலம் குன்றியோர் மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்;:

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள அமல அன்னை மனநலம் குன்றியோர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை,எளியோர் பயன்பெற்றிடும் வகையில் தமிழகம் முழுவதிலும் கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வருகிறது.இதன் ஒருபகுதியாக தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டியில் செயல்பட்டு வரும் அமலஅன்னை மனநலம் குன்றியோர் மறுவாழ்வு இல்லத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று மனநலம் குன்றியோர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள அனைவரும் தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில் இனிப்புகள்,பட்டாசுகள், போர்வைகள்,சேலைகள் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: இந்த ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்கள் இல்லாத தீபாவளியாக இருந்தாலும் அவரது புகழுக்கு புகழ் சேர்த்திடும் வகையில் தீபாவளி திருநாளில் டி.கல்லுப்பட்டியில் அமைந்திருக்கும் அமலஅன்னை மனநலம் குன்றியோர் மறுவாழ்வு இல்லத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி யிருக்கிறோம். அம்மாவின் புகழை உலகெங்கிலும் எடுத்துச் செல்லவேண்டியது ஒன்றறரை கோடி தொண்டர்களின் கடமையாகும்.அம்மாவின் சிறப்பே ஏழைகளை தேடிச் சென்று உதவுவது தான்.அதனால் தான் அன்னை தெரசா அம்மாவின் இல்லம் தேடிச் சென்று அவரை வாழ்த்தி மகிழந்தார்.இது போன்ற நலத்திட்ட உதவிகள் அம்மாவின் திருப்பெயரால் தொடர்ந்து நடைபெற்றிடும் என்று பேசினார்.அப்போது மறுவாழ்வு மையத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் அனைவரும்  தங்களுக்கு தீபாவளி திருநாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சியினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமசாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,முன்னாள் கவுன்சிலர் பழனிச்செல்வி ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் நாகலெட்சுமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,கட்சி நிர்வாகிகள் அன்னபூர்ணா தங்கராஜ்,வக்கீல் பாஸ்கரன்,தங்கராஜ்,பிச்சைகனி,தர்மர்,மாசாணம்,சுப்பிரமணியன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து