முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டார் ரயில் நிலையத்தில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்புப்பணிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  , நாகர்கோவில், கோட்டார் இரயில் நிலையத்தில் களப்பணியாளர்கள் மேற்கொண்ட, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்புப்பணிகளை நேரில் சென்று  பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  , நாகர்கோவில், கோட்டார் இரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயில் டிரம்கள், அட்டை பெட்டி ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  மேலும், இரயில் நிலைய நடைபாதை கடைகளில் உள்ள குளிர்சாதன பெட்டிகள், இரயில் காவல் நிலையத்தில் உள்ள தண்ணீர் குடங்கள், பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் நடைபாதையில் உள்ள பொதுமக்கள் கைகழுவும் இடம் போன்ற இடங்களில், தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டு, தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களை, உடனடியாக அப்புறப்படுத்திட, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, நாகர்கோவில் நகராட்சி சுகாதார அலுவலர்  வினோத்ராஜா, இரயில் நிலைய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து