எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக வீடுகள் - கடைகள், பள்ளிகளுக்கு அபராதம் விதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடவடிக்கை தீவிரம்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுப்புறங்களை சுகாதாரம் இல்லாமல் வைத்திருந்து டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் முதல் சுகாதாரமற்ற நிறுவனங்கள் மற்றும் வீடுகளை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நோட்டீஸ்
வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமல்லாது சுகாதாரமற்ற பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதாக கடைகள், நிறுவனங்கள், வீடுகள் என 3 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினர். அதன்பிறகும் கொசுக்கள் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றாததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்தும் இதே நிலை நீடித்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கு அபராதம்
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே நவோதயா பள்ளியைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும், சின்னவேப்பனம் அருகே நேஷனல் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு இருந்தது. இந்த பாதிப்பு ஏற்பட்ட பிறகும் அந்த பள்ளிகளில் சுகாதார பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பள்ளியை சுற்றி தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் அந்த 2 பள்ளிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளின் சுகாதாரச் சான்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சட்டத்தின்படி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது மட்டுமல்லாது நூலகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை - நெல்லை
தஞ்சை மாவட்ட நூலகத்தில் சுகாதார மற்ற நிலையில் பொருட்கள் இருப்பதையும் அதிகாரிகள் ஆய்வின்போது கண்டறிந்தனர். அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்ததால் அந்த நூலகத்திற்கு ரூ.1000 அபராதம் விதித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். நெல்லை என்.ஜி.ஓ காலனியில் ஒரு கட்டிட உரிமையாளரின் வீட்டு தண்ணீர் தொட்டியில் ஏராளமான கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டதால் அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். பாளையங்கோட்டையில் ஒரு கட்டிட உரிமையாளருக்கும், செந்தில் நகரில் ஒரு உணவு விடுதி உரிமையாளருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் - நாகர்கோவில்
கடலூர் கம்மியம்பேட்டை, சுப்பராயலு நகர் பகுதிகளில் உள்ள டயர் விற்பனை செய்யும் கடை, பஞ்சர் ஒட்டும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 8 கடைகளில் இருந்த டயர்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் டெங்கு கொசுக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 8 கடையின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடையில் இருந்த 4 டன் டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 வர்த்தக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரூ.38 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை - ஈரோடு
கோவையில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், வீடுகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்ததாக 1000 வீடுகள், 2 ஆயிரம் நிறுவனங்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும், நிறுவனங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ.5000 வரையும் என மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு, கடை, காலிமனை உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 987 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்குடியில் சுகாதாரமற்ற வீடு, கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியத்தில் நேற்று மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். அப்போது 3 கட்டிடங்களில் இருந்த தொட்டிகளில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கி தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.