முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீதின் வீட்டுக் காவல் 1 மாதம் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதின் வீட்டுக் காவல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது, அவரது கூட்டாளிகள் 4 பேர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் லாகூரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது வீட்டுக் காவல் 4 முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக நீட்டிக்கப்பட்ட காவல் வரும் 24-ம் தேதி முடிவடைகிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் விடுதலை செய்வோம் என நீதிமன்றம் கடந்த வாரம் கூறியிருந்தது.

இதனிடையே, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களது வீட்டுக் காவலை நீட்டிக்கக் கோரும் மனுவை பஞ்சாப் அரசின் உள்துறை கடந்த சனிக்கிழமை திரும்பப் பெற்றது. ஆனால் பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின் கீழ் அவர்களது காவலை 3 மாதம் நீட்டிக்குமாறு மாகாண நீதித்துறை மறு ஆய்வு வாரியத்திடம் கோரிக்கை வைத்தது.

இவ்வழக்கு நீதிபதி யவர் அலி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹபீஸ் உள்ளிட்டோர் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் ஹபீஸின் வீட்டுக் காவலை 24-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு மட்டும் நீட்டித்து உத்தரவிட்டனர். அதேநேரம் அவரது கூட்டாளிகளின் வீட்டுக் காவலை நீட்டிக்க மறுத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து