முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் திடீர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசின் தலைமை துணை வழக்கறிஞராக 2014-ம் ஆண்டு ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் அண்மையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம், ரஞ்சித்குமாரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிசீலித்திருந்தது. அண்மையில் அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி, பதவி நீட்டிப்பு வேண்டாம் என கூறியிருந்தார். இதையடுத்து கேகே வேணுகோபால் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சொந்த காரணங்களுக்காக பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து