முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 பேரை பலிகொண்ட பொறையார் பணிமனையின் ஓய்வறை இடிப்பு

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

பொறையார்: 8 பேரை பலிகொண்ட பொறையார் பணிமனையின் ஓய்வறையை முழுவதுமாக இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து பணிமனையின் ஓய்வறை மேற்கூரை நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர், நடத்துனர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடத்துனர் வெங்கடேசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொறையார்  பணிமனையின் ஓய்வறையை முழுவதுமாக இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. 1943 ல் கட்டப்பட்ட பணிமனை ஓய்வறை முழுவதுமாக இடிக்கும் பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து