முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழியாறு - மணிமுக்தா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, கோவை மாவட்டம் ஆழியாறு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கைகள் வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களில் இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 25.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மணிமுக்தா அணை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள  மணிமுக்தா நதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களுக்கு பாசனத்திற்காக நாளை (22-ம் தேதி) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 5,493 ஏக்கர்  நிலங்கள் பயன்பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது அறிக்கைகளில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து