முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையம் பற்றி சிதம்பரம் கூறிய கருத்துகள் பொருத்தமற்றவை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதிலடி

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத்: தேர்தல் ஆணையம் பற்றி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்துகள் பொருத்தமற்றவை’’ என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

இமாச்சலபிரதேச மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. குஜராத்துக்கு தேதி அறிவிக்கவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கும் அதிகாரத்தை மோடிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நேற்று கூறியதாவது:
பாஜக.வைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் பற்றி

அவர்கள் கூறும் கருத்துகள் இந்திய ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றவை. காங்கிரஸ் கட்சியோ சிதம்பரமோ, இந்த நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை முதலில் பார்க்கட்டும். அதன்பிறகு மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிக்கட்டும்.
இவ்வாறு விஜய் ரூபானி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து