முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாராபுரத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தாராபுரத்தில் உள்ள நல்ல தங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகள் கோரிக்கை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடைநீர்த்தேக்கத்திலிருந்து நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார் குளப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார் குளப் பாசனப் பகுதிகள் பயனடையும் வகையில் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

4831 ஏக்கர் நிலங்கள்...

இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள 4831 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து