முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் பாக். ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் சிறுமி காயம் அடைந்துள்ளார்.

ஒருவர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் காமல்கோட் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ராணுவத்தில் சுமை தூக்குபவராக பணிபுரிந்த ஒருவர் கொல்லப்பட்டார். முன்னறிவிப்பு இன்றி எல்லையில் அத்துமீறி இந்த தாக்குதல் நடந்துள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேவேளையில் தாக்குதலில் காயமடைந்த சிறுமி உரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

600க்கும் அதிகமான...

இந்த வருடத்தில் பாகிஸ்தான் படைகளின் அத்துமீறிய தாக்குதல் அதிகரித்து உள்ளது. செப்டம்பர் 30ந்தேதி இறுதி வரையில் 600க்கும் கூடுதலான முறை இந்திய எல்லை மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 10 வருடத்தில் நடந்த அதிக எண்ணிக்கையிலான அத்துமீறிய தாக்குதல் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து