முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்ப்ளே சாதனையை முறியடிக்கும் சூழ்நிலை வந்தால் ஓய்வு பெறுவேன் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை: டெஸ்ட் போட்டியில் 618 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 619 வீழ்த்தும் சூழ்நிலை ஏற்பட்டால், கும்ப்ளே சாதனையை முறியடிக்காமல் ஓய்வு பெறுவேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

ஓய்வு பெறுவேன்
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் டெஸ்ட் போட்டியில் 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். அத்துடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். தற்போது இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்து வருகிறார். டெஸ்ட் போட்டியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் இவர், ஒருவேளை கும்ப்ளே சாதனையை முறியடிக்கும் நிலை ஏற்பட்டால், 618 விக்கெட்டுக்களுடன் ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.

மிகப்பெரிய ரசிகன்

மேலும் இதுகுறித்து அஸ்வின் கூறுகையில்.,
‘‘கும்ப்ளே சாதனையை முறியடிக்கும் எண்ணம் தோன்றியதே கிடையாது. அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 618 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, 618 விக்கெட்டுக்கள் வீழ்த்திய போட்டிதான், என்னுடைய கடைசி ஆட்டமாக இருக்கும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து