முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெங்கய்யா நாயுடு வீடுதிரும்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : துணை ஜனாதிபதி  வெங்கய்ய நாயுடு (68) பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரது இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அடைப்பை நீக்கி ‘ஸ்டென்ட்’ பொருத்தும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கய்யா நாயுடு மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இதய பிரிவு மருத்துவர் பேராசிரியர் பல்ராம் பார்கவா தலைமையில், வெங்கய்ய நாயுடுவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர் ஒருவர் கூறியபோது, ‘‘வெங்கய்ய நாயுடுவின் இதயத்தில் பிரதான ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இடத் தில் ஸ்டென்ட் பொருத்தபபட்டது’’ என்றார். சிகிச்சை முடிந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியபோது, ‘‘தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மூன்று நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து