எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசின் போர்க்கால நடவடிக்கைகளால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் பலர் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–-
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 240 பேர் என்ற அளவில் இருந்தது. அது இப்போது 200 பேர் என்ற அளவில் குறைந்து வருகிறது. கடந்த மாதத்தில் டெங்கு பாசிட்டிவ் 40 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்து இப்போது 20 பேர் என்ற எண்ணிக்கையில் பாதியாக குறைந்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.பொது மக்களுக்கு எங்கள் அன்பான, அழுத்தமான வேண்டுகோள் என்னவென்றால் காய்ச்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். அதை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தாமதப்படுத்த வேண்டாம். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். அல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம்.3 வயது குழந்தைக்கு காய்ச்சல் வந்ததால் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் ஒரு விதையை உரசி நெற்றி, நெஞ்சு பகுதியில் சூடு வைத்து 10 நாட்களாக காய்ச்சல் குறையாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சுய மருத்துவம் கூடாது. மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. பாட்டி வைத்தியம் செய்து கொள்ளக் கூடாது.போலி மருத்துவர்களை கைது செய்யும் பணியில் அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
டெங்கு பாதிப்பின் போது முதல் 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும் 3, 4, 5-வது நாட்களில் காய்ச்சல் இருக்காது. குழந்தை நன்றாக இருக்கும். அதனால் அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதோ வேறு பணிக்கு அனுப்புவதோ கூடாது. ஏனென்றால் மீண்டும் ஒருமுறை காய்ச்சல் வரும்.குழந்தையாக இருந்தால் 7 நாட்கள், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து காய்ச்சல் முற்றிலும் குணமாகி விட்டது என்று மருத்துவர் உறுதிபடுத்திய பிறகு தான் அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதற்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். டெங்குவை ஒழிக்க மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கி முழு வீச்சில் ஈடுபடுகிறார்கள். இப்போது காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது. முதல்வர் அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.பள்ளிக் கல்வித் துறையினர் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
முதலில் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பின்னர் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் அவர்களின் வீடு மற்றும் வீட்டு சுற்றுப்புறத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.திருவண்ணாமலையில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவியிடம் கேட்டபோது விழிப்புணர்வு தகவல்களை சரியாக சொல்லாததால் அந்த பள்ளி சரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்று எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும் பொது சுகாதாரத்துறையின் வேண்டுகோளை ஏற்று உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் ஆணை.டெங்குவுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். எதையுமே எதிர்பார்க்காமல் மாநில அரசு தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக நர்சுகள், லேப்டெக்னீசியன்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவு வழங்கியுள்ளோம்.
டெங்குவுக்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று துணை இயக்குனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முதல்வர்களுக்கும் வேண்டிய உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே எந்த சுணக்கமும் இல்லாமல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் டெங்கு இறங்கு முகமாக உள்ளது.
மதுரை, திருச்சி மாவட்டத்தில் 100 சதவீதம் இந்த வாரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். டெங்கு என்பது குணப்படுத்தக் கூடிய நோய்தான். ஆனால் உரிய நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார, ஒன்றிய அளவில் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தலைமையில் டெங்குவை ஒழிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தீவிர டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.