முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் வட்டம் தேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில்   டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில்  கலெக்டர்பிரசாந்த் மு.வடநேரே,   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அறிவுரை

 அரசு கல்லூரி மாணவர் விடுதியில் உள்ள காப்பாளரிடம் விடுதியில் எவ்வளவு மாணவர்கள் தங்கியுள்ளனர் என கேட்டறிந்து அங்குள்ள சமையற்கூடத்தில் உணவு தயாரிக்கும் பாத்திரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், உணவு தயாரிக்கும் பாத்திரங்களில் தினந்தோறும் சுத்தமான தண்ணீரினை உபயோகப்படுத்திய பிறகு புதிதாக நிரப்பிட வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், விடுதியின் வளாகத்தில் உள்ள தொட்டியினை அவ்வப்போது சுத்தம் செய்து குளோரினேஷன் செய்யவேண்டும் என அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருட்களான டயர், டீ கப் மற்றும் வாட்டர் பாட்டில், தெர்மாகோல் ஆகியவற்றினை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெறவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும், கடந்த பல்வேறு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த வகையில் பல்வேறு வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தினை பொறுத்தவரை இக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும்  மேலும் இக்கொசுப்புழுக்களால் டெங்கு காய்ச்ச்ல் ஏற்படா வண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரதி (எ) லட்சுமி, இளநிலை பொறியாளர் .மலர்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.ராமு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ், நகர அமைப்பு அலுவலர் அன்பு, விடுதி காப்பாளர் ரவிசங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து