முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு, போலியோ இல்லாத உலகம் வேண்டும்- பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும்: கலெக்டர் சி.அ.ராமன், பேச்சு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      வேலூர்
Image Unavailable

 

இன்று உலக போலியோ தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தின் சார்பில் ரோட்டரி மாவட்டம் 3231 சார்பில் "போலியோ, டெங்கு இல்லாத உலகம் இதுவே ரோட்டரியின் சபதம்" என்ற கொள்கையுடன் உலகில் முற்றிலும் போலியோவை ஒழிக்கும் வரையில் ரோட்டரி சங்கம்; தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாபெரும் நான்கு சக்கர வாகன பேரணி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து புரப்பட்டு ஆற்காடு, இராணிப்பேட்;டை, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருத்தனி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வரை செல்லவுள்ளது.

வாகன பேரணி

இன்று காலை அண்ணா கலை அரங்கம் முன்பு இப்பேரணி கலெக்டர் சி.அ.ராமன், அவர்களால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஆளநர் கௌரிலால், செயலர் ஜே.கே.என்.பழனி ஆகியோர்; முன்;னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், டெங்கு, போலியோ இல்லாத உலகம் வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி ஆடிட்டர் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து