எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- 110 வது தேவர் ஜெயந்தி மற்றும் 55வது தேவர் குருபூஜை(28.10.17, 29.10.17 மற்றும் 30.10.17 ஆகிய தேதிகளில்) நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துகுமரன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராசராசன்.இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துகுமரன் அவர்கள் அவர்கள் தெரிவித்ததாவது.,
110 வது தேவர் ஜெயந்தி, மற்றும் 55வது குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்குவது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பின்வரும் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்திலிருந்து பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில், உரிய வாகன ஆவணங்களை அளித்து அனுமதி பெற்று, அனுமதி சீட்டினை வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஒட்டிச்செல்லவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், லாரி, டிராக்டர், சைக்கிள், மற்றும் திறந்த வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. நடைபயனமாக செல்ல அனுமதி இல்லை. வாகனத்தில் ஆயுதங்கள், பட்டாசுகள், மதுபானங்கள் எடுத்துச் செல்ல கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்திக் கொள்ள அனுமதி இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் எவ்வித பேனர்களோ, கொடிகளோ கொண்டு செல்லக் கூடாது.
பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.
சாத்தூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை-காந்தி நகர் - ராமலிங்காமில் - கல்லூரணி - எம்.ரெட்டியாபட்டி – மண்டப சாலை –கானாவிலக்கு –கமுதி –பசும்பொன் சென்று மீண்டும் அந்த வழியே திரும்ப வேண்டும்.
ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் கல்குறிச்சி – பாலையம்பட்டி பை-பாஸ் -காந்தி நகர் -இராமலிங்காமில் -கல்லூரணி –எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை, கானாவிலக்கு, கமுதி, பசும்பொன் சென்று மீண்டும் அந்த வழியே திரும்ப வேண்டும்.
திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் ராமலிங்காமில் - கல்லூரணி –கானாவிலக்கு- கிளாமரத்துப்பட்டி - கமுதி –பசும்பொன் சென்று மீண்டும் அந்த வழியே திரும்ப வேண்டும். முத்துராமலிங்கபுரம், புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
விருதுநகர் மாவட்டத்திலிருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் மாவட்ட நிர்வாகத்தால், தடை செய்யப்பட்டுள்ள வழித்தடங்களில் செல்லக் கூடாது. வாகன அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் கமுதி - பசும்பொன் நினைவகத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன உரிமையாளர் தணிக்கையின் போது கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தில் ஆர்.சி பெர்மிட், ஓட்டுநர் உரிமம், மற்றும் சான்றிதழ்கள் அசலோ அல்லது சான்று பெறப்பட்ட உண்மை நகல்களோ கொண்டு செல்லவேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29.10.17 மற்றும் 30.10.17 ஆகிய தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மனு செய்திட வேண்டும். அரசு பேருந்துகளில் ஜோதி, மது பாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது கொடி மற்றும் பேனர் கட்டிச்செல்வது, ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ய வேண்டும்.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு நகராட்சி, பேருராட்சி மற்றும் ஊராட்சிகளில் பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டிகள் , சுவர் விளம்பரங்கள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. சொந்த ஊர்களில் 30ம் தேதிக்கு முந்தைய தினமோ அல்லது பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. 30ம் தேதி மட்டும் அவரவர் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டிகளில் வருதல், சாதித்தலைவர்கள் வேடம் அணிந்து வருதல் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை என மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துகுமரன் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,