எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - 60வது குடியரசு தினம் மற்றும் 35வது பாரதியார் தின மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
மதுரை மாவட்டம், டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் 60வது குடியரசு தினம் மற்றும் 35வது பாரதியார் தின மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பாராட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விருது கிடைத்தது பெரு மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு இதே போல் முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும். முயற்சியால் தான் வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்தோடு மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற போராட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் தேசிய அளவிலும், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தான் அவர்களை ஊக்குவிப்பதற்காக அம்மா அவர்கள் இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிக நிதி ஒதுக்கினார்கள். சமீபத்தில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ரூ.14 இலட்சம் ஊக்கத்தொகையாக வழங்கியது.
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது. இளமை பருவத்தை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சி கண்டிப்பாக தேவை. இவ்விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுக்;கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம் மிகவும் பழமை வாய்ந்த விளையாட்டரங்கம் ஆகும். மதுரை மாவட்டத்தில் தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய பெருமை மதுரை விளையாட்டரங்கிற்கு உண்டு. தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா நாள்தோறும் விளையாட்டு விடுதி உணவுபடியை ரூ.75-லிருந்து ரூ.250 - ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்கள்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளை அறிமுகப்படுத்தி, மாநில அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ75 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ,50,000 ஆயிரமும், மதுரை மாவட்டத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் 271 வீரர்கள், 254 வீராங்கனைகள் ஆக மொத்தம் 525 கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற 30 வீரர்கள், 30 வீராங்கனைகளுக்கு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படுத்திட, தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ.25.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா பள்ளிக்கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பாரதியார் தின , குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.600 - ரூ.400, ரூ.200, என்ற ஊக்க உதவித்தொகையினை இரட்டிப்பாக்கி ரூ.1200, ரூ.800, ரூ.400 வழங்க ஆணை பிறப்பித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.இராஜன்செல்லப்பா, அ.தி.மு.க.மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலைராஜா, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் புதூர்துரைப்பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.