முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவுத்துறை சார்பாக ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      ஈரோடு
Image Unavailable

கூட்டுறவுத்துறை சார்பாக ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் முற்பகல் 11.00 மணிக்கு ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன்  நிலவேம்புக் குடிநீர் பொதுமக்களுக்கும், அலுவலர்களுக்கும், கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கும் வழங்கினார். இம்முகாமில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன்  தலைமையில் அனைத்து பணியாளர்களும் “சுகாதார உறுதி மொழி” எடுத்துக்கொண்டனர். அவர்களிடையே உரையாற்றும் போது டெங்கு காய்ச்சலைத் தடுக்க ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிடவேண்டும்.  தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.  பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்கவேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து