முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம் மூடல்

வெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

உசிலம்பட்டி - அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம் மூடல்
 உசிலம்பட்டி அருகே உள்ள பெரியசெம்மேட்டுப்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்தை மதுரை பாதுகாப்பு அலுவலர் விவிலியராஜும் அவரது குழுவினரும் ஆய்வு செய்தனர்   உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா, வட்டாட்சியாளர் ராமச்சந்திரன், சார்பு ஆய்வாளர் ஆகியோர் சோதனையிட்டனர்.  குழந்தைகள் காப்பக உரிமையாளர் தேவபிச்சை அவர்களிடம் விசாரணை செய்தனர்.
 விசாரணையில் இந்தக் காப்பகம் போலியாக செயல்பட்டது தெரிய வந்தது.   உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அங்கு தங்கி இருந்த 18 குழந்தைகளையும் மதுரையில் உள்ள பாதுகாப்பான விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
 நாளை அனைத்து குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்படுவர்.  பெற்றோர்கள் விரும்பினால் குழந்தைகள் ஏற்கனவே படித்த பள்ளியிலேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்படும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து