முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் 1518 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளின்  மாணவ,மாணவியர் 1518பேருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிகணிணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகா பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 11 மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மடிகணிணிகள் வழங்கிடும் விழாக்கள் வெகு சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து வரவேற்று பேசினாhர்.திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம், பேரையூர் வட்டாட்சியர் உதயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதன்படி ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்ற இந்த விழாக்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 2016-2017-ம் கல்வியாண்டில் செங்கப்படை,கள்ளிக்குடி,கே.வெள்ளாகுளம்,புளியங்குளம்,வில்லூர், கல்லுப்பட்டி,பேரையூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள்,கல்லுப்பட்டி காந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாப்புநாயக்கன்பட்டி தனியார் மேல்நிலைப் பள்ளிகளில்  பயின்ற மாணவ,மாணவியர் 1518 பேருக்கு விலையில்லா மடிகணிணிகளை தமிழக அரசின் சார்பில் வழங்கி சிறப்புரையாற்றினார்.
 அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் பள்ளியில் படிக்கும் போதே மாணவ,மாணவியருக்கு விலையில்லா மடிகணிணிகள் வழங்கி சாதனை படைத்த ஒரே முதல்வர் அம்மா மட்டும் தான்.அம்மாவின் சிந்தையில் உதித்த இந்த சீர்மிகு திட்டத்தின் மூலம் ஒருநொடியில் உலகத்தை உங்கள் உள்ளங்கைகளில் கொண்டு வந்துவிட முடியும்.விமானத்தில் பறப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிகணிணியை சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ,மாணவியர் பயன்படுத்திடும் வகையில் விலையில்லா மடிகணிணிகளை வழங்கி கல்வியில் புரட்சி ஏற்படுத்தியவர் அம்மா.மடிகணிணி கிடைக்குமா கிடைக்காதா என்று பலர் பயங்காட்டி வந்த நிலையில் அம்மாவின் வாக்குப்படி அம்மாவின் அரசு தொடர்ந்து 100ஆண்டுகள் அன்னைத் தமிழகத்தை ஆட்சிபுரிவதுடன் தொடர்ந்து 100ஆண்டுகள் மடிகணிணி வழங்குதல் உள்ளிட்ட அம்மாவின் அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வரும்.இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து,முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,முன்னாள் கல்லுப்பட்டி யூனியன் துணைச் சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாணிக்கம்,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,கட்சி நிர்வாகிகள்பிரபுசங்கர்,ராமகிருஷ்ணன்,தர்மர்,தங்கராஜ்,வக்கீல் பாஸ்கரன்,சரவணன்,கண்ணன்,முருகன்,ரவி,பிச்சைமணி மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள், பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள்,நிர்வாகிகளுடன் திரளான மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து