முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகுபட்டி - சில்வார்பட்டி கிராமங்களில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பயிற்சி முகாம்

செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம். -திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் அழகுபட்டி, சில்வார்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் மதுரை வேளாண்மை கல்லூரியைச் சேர்;ந்த நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சந்தோஷ், பாண்டியராஜன், பிரவின்குமார், தினேஷ்குமார், சுந்தரேஷ்வரன், அனில்குமார் ரெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சில்வார்பட்டியில் தங்கி அனுபவ கல்வி பயின்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தென்னை டானிக்கின் முக்கியத்துவம் குறித்து தெப்பக்குளத்துப்பட்டி, காளனம்பட்டி மற்றும் பல பகுதிகளில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய வேளாண்மை உதவி அலுவலர் திருமலைசாமி, அலுவலக உதவியாளர் சந்திரகலா மற்றும் ஊர்மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை டானிக் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து