எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 25 ராவனேஸ்வரன் நகர் , சித்தகவுண்டர் காடு மற்றும் கோட்டம் எண் 27 ல் சின்னப்பன் தெரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர். ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு செய்தார்.
கலெக்டர் எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு , துண்டு பிரசுரங்கள், ஒட்டு வில்லைகள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது. 20 ஆயிரத்து 868 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 8 இலட்சத்து 32 ஆயிரத்து 938 பேர் தங்களது உடல் நிலையை பரிசோதித்து , உரிய சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், அம்மா உணவகங்கள், உழவர் சந்தைகள் , காய்கறி மார்க்கெட்டுகள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி , கல்லூரி வளாகங்களிலேயே உரிய இடைவெளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 01.7.2017 முதல் 25.10.2017 வரையிலான நாட்களில் 4 ஆயிரத்து 443 கிலோ அளவிலான நிலவேம்பு பொடியிலிருந்து 1 இலட்சத்து 33 ஆயிரத்து 275 மி.லிட்டர் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப்பட்டு, 25 இலட்சத்து 21 ஆயிரத்து 715 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 12 அரசு பொதுமருத்துவமனைகள், 1 மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் மருத்துவ அலுவலர்கள் மற்றம் செவிலியர்கள் பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவர்களும் அடையாளம் காணப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனிடையே டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையடையும் என்பதை கருத்தில் கொண்டு, பல முறை பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. களப்பணியாளர்களை வீடுகளுக்குள் அனுமதிக்கும் படியும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை தடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் களப்பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள விடாமலும் இருப்பது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்களின் பொதுசுகாதார மேம்பாட்டு பணியினை கருத்தில் கொண்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக எடுக்கப்படும்.
மேலும் புற நகர் மற்றம் மாநகர பகுதிகளில் காலி மனை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் காலி மனைகளை சுத்தம் செய்து, தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ், லாரி பணிமனைகள், உணவகங்கள் , தங்கும் விடுதிகள், திரையரங்குகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு அவர்களது வளாகங்களை தூய்மையாக பராமரிப்பதற்கு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டு, தகுந்த அறிவுரை வழங்கி சுத்தம் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சில பகுதிகளில் இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருப்பது, அலுவலர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து, சுகாதார மேம்பாட்டு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் ஆர்.ரவி, மாநகர நல அலுவலர், மரு. வி. பிரபாகரன், தாய் சேய் நல அலுவலர் என். சுமதி, உதவி பொறியாளர் வி. திலகா, சேலம் மேற்கு வட்டாட்சியர் வி. திருமாவளவன், சேலம் தெற்கு வட்டாட்சியர் பி.எஸ்.லெனின், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.