எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர். ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ டெங்கு தடுப்பு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டு பேசும்போது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் சுற்றி இருக்கின்ற ஏறத்தாழ 45,000 ஏக்கர் முதல் சாகுபடி பருவத்தில் பயன் அடைகின்ற வகையில் ஒரு நாளைக்கு 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு வந்து இருக்கிறோம். கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் தட்டுபாடே இல்லாத அளவிற்கு மாநகராட்சியின் சார்பில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக நான்கு மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் நான்கு வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு அறவே டெங்கு கொசு புழு உற்பத்தி இல்லாத அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தீவிர துப்புரவுப்பணிக்காக 400 பணியாளர்களும் மேலும் கொசுஒழிப்பு பணிகளுக்காக 1100 பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். புகை பரப்பும் வண்டி 8, 5 லிட்டர் புகை பரப்பும் இயந்திரங்கள் 33, 2 லிட்டர் கை புகை பரப்பும் இயந்திரங்கள் 52, கை தெளிப்பான் 28 என டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகை பரப்பும் இயந்திரத்திற்கு 1600 லிட்டர் கொசு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது மேலும் இப்பணியில் 40 மருத்துவர்களும், 117 செவிலியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. 29 வகையான காய்ச்சல் இருக்கிறது என்றும் காய்ச்சல் வந்தவுடன் அது டெங்கு காய்ச்சல் என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் டெங்கு காய்ச்சல் அறவே கட்டுப்படுத்தப்படும். எனவே அம்மாவின் அரசு தமிழக மக்களுக்கு சிறப்பான பணிகளை வழங்கி வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்கு செல்லும்பொழுது டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, அடுத்த 2 அல்லது 3 நாட்கள் கழித்து மறுபடியும் அதே ஆய்வு மேற்கொள்ளும் போது தவறு இருந்தால் அபராதம் விதிக்கலாம். அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல. ஒரு வீட்டினாலோ அல்லது நிறுவனத்தினாலோ சுற்றியுள்ளவர்களுக்கும், அடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அபராதம் விதிக்கப் படுகிறது. பொதுமக்கள் தங்கள் புகார்களை மக்கள் பிரதிநிதிகளிடம்தான் கூறுவார்கள் எனவே அலுவலர்கள் அதனை கவனத்தில் கொண்டு அரசிற்கு நல்ல பெயர் ஏற்படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் மழைகாலங்களில் பாதாள சாக்கடை மேனுவெல்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படும் அவற்றை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 5 வார்டுகளுக்கு ஒரு சம்பு அமைத்தோ மோட்டார்களின் எண்ணிக்கையை அதிகரித்தோ கழிவுநீரினை அகற்ற வேண்டும். கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள் போடுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீரினை அகற்றுவதற்காக நவீன கழிவுநீர் உறிஞ்சு வாகனம் வாங்குவதற்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மண்டலத்திற்கு ஒன்று வீதம் விரைவில் கொள்முதல் செய்து மதுரை மாநகராட்சிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நமது செயல்பாட்டையும் பணிகளையும் பார்த்து பாராட்டுகிறார்கள். எனவே மக்கள் பணியை நாம் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், பேசும்போது தெரிவித்ததாவது :
மதுரை மாநகராட்சியில் வறட்சிக்காலத்தில் மிகப்பெரிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது சிறப்பாக திட்டமிட்டு வெற்றிகரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3,40,000 வீடுகளை 300 வீடுகளாக பகுதி பகுதியாக பிரித்து 300 முதல் 350 வீடுகளுக்கு ஒரு டிபிசி பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 50 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொண்டு 6 நாட்கள் கழித்து 7 வது நாள் மறுபடியும் அதே 50 வீடுகளில் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த நடைமுறை வருடம் முழுவதும் மேற்கொள்வதால் வீடுகளில் தேவையில்லாமல் தேக்கி வைத்துள்ள தண்ணீர் அகற்றப்படுவதுடன் தேவையற்ற பொருட்களும், கொசு புழு உற்பத்தியாகும் காரணிகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை ஆய்வு மேற்கொண்ட போது டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இப்பணியில் களப்பணியாளர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் 4 வார்டுகள் தேர்வு செய்;யப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் 50 முதல் 60 பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகள், காலியிடங்கள் என தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தில் அனைத்து வார்டுகளும் என சுழற்சி முறையில் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள 744 பள்ளிகளுக்கும் 2 தவணையாக வருடத்திற்கு 6 முறை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பிலும், பொது சுகாதாரத்துறையின் சார்பிலும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம்கள்; தொடர்ந்து நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து பணிமனைகள், பெரிய கட்டிடங்கள் என வார்டு வாரியாக கணக்கெடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் தேங்குவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது. இந்த டெங்கு தடுப்பு பணி தொடர்ந்து மேற்கொள்வதால் டெங்கு கொசு புழு உற்பத்தி உருவாகுவது தடுக்கப்படும். 300 வீடுகளை பணியாளர்கள் முறையாக பார்க்கிறார்களா என கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முறையாக பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணியை பொறுத்தமட்டில் டெங்கு அனைத்து காலங்களிலும் வருவதால் அதிக பொருட் செலவு ஆனாலும் மக்களுடைய பாதுகாப்பு நலன் கருதி இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் இதே முறை பின்பற்றப்படும். இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகும் புழு உற்பத்தி கண்டறியப்பட்டால்தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் கேஸ் குளோரின், லிக்யூட் குளோரின் மூலம் குடிநீரில் சரியான அளவு குளோரின் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவு சரியாக கலக்கப்பட்டு இருந்தால் டெங்கு கொசு புழு உற்பத்தி குறைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் இதே முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நகராட்சி நிர்வாக ஆணையாளர் அவர்கள் மண்டலம் எண்.2 வார்டு எண்.44 கே.கே. நகர், மண்டலம் எண்.1 வார்டு எண்.23 விளாங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு தடுப்பு பணிகளிலும், தீவிர துப்புரவு பணியினையும் ஆய்வு மேற்கொண்டார். விளாங்குடி கணபதி நகர் 1 வது தெருவில் காலியிடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆயில்பால் தெளிக்குமாறு உத்தரவிட்டார். அங்கு பணியாற்றிய டிபிசி பணியாளர்களிடம் டெங்கு பணி குறித்த விபர அறிக்கையினை பார்வையிட்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர், சென்னை ஜி.பிரகாஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, சரவணன், துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், நகரப்பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மண்டல நிர்வாக ஆணையர்கள், 5 மாவட்ட நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.