முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா மக்களுக்கு எதிராக தடை: ரஷ்யா முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - ரஷ்யாவில் ஊழலுக்கு எதிராக போராடி வந்த வழக்கறிஞர் செர்கி மேக்னிட்ஸ்கி பெருமளவு வரி ஏய்ப்பு செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு சிறையில் உயிரிழந்தார். இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ரஷ்ய அதிகாரிகள் 30 பேர் கனடாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, “கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக கனடா குடிமக்கள் பலர் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். தடை விதிப்பதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தைக்கு கனடா முன்வர வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து