எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, பவானி கொடுமுடி, தேனி குச்சனூர், மதுரை திருவாதவூர், திருவாரூர் திருநெல்லிக்காவல், காஞ்சிபுரம் குரங்கணில் முட்டம், புதுக்கோட்டை திருப்புனவாசல், மயிலாடுதுறை இடும்பாவனம், பூந்தமல்லி, ஸ்ரீவாஞ்சியம், திருப்பைஞ்சீலி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் சனிபகவான் தனி சன்னிதியாக அமைந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
அந்த ஊர்களில் உள்ள சனிபகவானின் சன்னிதியின் தனி வரலாறை தெளிவாக பார்க்கலாம்...!
அவரவர் ஜாதக அமைப்பின்படி இன்பதுன்பங்களை வழங்க ஏற்பட்ட கிரகம் சனி என்பர். ஆயுள், உடல் நலம் காப்பதோடு, ஏற்றமும், இறக்கமும் செய்ய வல்லவர். நவக்கிரகங்களில் உறுதியான கிரகம் சனி ஒருவரே.
நன்மைகளை வாரி வழங்குவதில் தாராள இயல்புடையவர் என்றும், அது போன்றே ஜாதகத்தில் தீமையான பலன்களை வழங்க வேண்டிய நிலையில் அமையப் பெற்றிருந்தால், தீமையளிப்பதிலும் தயக்கம் காட்டாதவர். ஒரு சுற்று முடிய முப்பது ஆண்டுகள். அதாவது ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
சந்திரன் உள்ள ராசியை ஜன்ம ராசி என்பர். ஜாதகத்தில் சந்திரன் உள்ள ராசியைக் கொண்டே கோசாரப் பலன்கள் கூறப்படுகின்றன. சந்திரனுக்கு பின்னுள்ள ராசி, சந்திரன் உள்ள ராசி மற்றும் அதற்கடுத்துள்ள ராசி என மூன்று ராசிகளிலும் கோசாரப்படி சனி சஞ்சரிக்கும் காலமே ஏழரைச்சனியின் காலம் என்பர்.
சந்திரன் நின்ற ராசிக்கு நான்காவது ராசியில் சனி உலவிடும் காலம் அர்த்தாஷ்டம் சனி அல்லது கண்டச் சனி என்பர். சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்பார்கள்.
சனி அசுப கிரகங்களில் ஒன்று. ஆணும் பெண்ணுமற்ற அலிக்கிரகம். எனினும் சேரும் கிரகத்தைப் பொருத்து ஆண்கிரகமாகவும் மாறும். வாயு தத்துவக் கிரகம். மனித உடலில் சிறு நீர்ப்பை, எலும்புகள், பற்கள், மண்ணீரல், காது ஆகியவற்றையும் குறிப்பிடும் காரத்துவமுள்ளவர்.
சிறுநீரகக் கோளாறு, பாதநோய், காக்கை வலிப்பு, குஷ்டம் ஆகியவற்றையும் வலிமை குன்றிய அல்லது குஸ்தான ஆதியத்தியம் பெற்ற கனியினால் ஏற்படும். இவற்றை தவிர்க்க நாம் வழிபட வேண்டிய சனி கிரக அம்சம் உடைய தலங்கள் வருமாறு:
1. திருநள்ளாறு
சனீஸ்வர பகவானின் தலமாகிய திருநள்ளாறு காரைக்காலில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் தர்பாரண்யேசுவரர் தர்ப்பைக் காட்டில் இருந்து, தர்ப்பைப் புல்லில் இருந்து தோன்றியவர், இன்றும் இந்த லிங்கத்தின் மீது தர்ப்பைப் புல்லின் வடு உள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானை ஐப்பசி மாதம், ஆட்சி பெறும் தை, மாசி மாதங்களில் வழிபடலாம். மேலும் சனீஸ்வர பகவானின் நட்சத்திரங்கள் ஆகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் சனிக்கிழமைகளில் சனி ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்தால் மிகச் சிறந்த பலன்கள் உண்டாகும்.
திருநள்ளாறு என்றாலே அங்கு சனீஸ்வர பகவானுக்கு தனிக்கோவில் இருக்கிறது என்று மட்டும் தான் நிறைய பேர் அறிந்திருப்பார்கள். ஆனால் அந்தத் தலத்தில் உள்ள மற்ற மூர்த்திகளின் பெருமைகளை அறிந்தவர்கள் சிலர் தான். ஒரு காலத்தில் இவ்வூர் தர்ப்பை புல் நிறைந்த வனமாக இருந்திருக்கிறது. வுனம் என்பதை ஆரண்யம் என்றும் சொல்வது உண்டு. அந்த தர்ப்பாரண்யத்தில் சுயம்பு உருவாக தோன்றிய ஈஸ்வரனின் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்.
பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் கோபுரவாசலில் மறைந்திருந்த சனி பகவானை அழைத்து தனது பட்டமாகிய ஈஸ்வர பட்டத்தை அளித்து இத்தலத்திலேயே இருந்து இங்கு வரும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யுமாறு ஆணையிட அவ்வாறே இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வரபகவான் இருப்பதாக ஐதீகம். சனி பகவானாக இத்தலம் வந்த இவர் ஈஸ்வரன் பட்டம் பெற்று சனீஸ்வர பகவான் ஆகியதாக சொல்லப்படுகிறது.
திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய திருத்தலங்கள்
விருத்தாசலம் : நள மகராஜன், சனீஸ்வர பகவானின் வேகம் தணிய, நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது விருத்தாசலத்தில் நளமகராஜன் இறைவனை வழிபட்டபோது அங்கு அவர் சந்தித்த பரதவாஜ முனிவர் திருநள்ளாறு சென்றால் நன்மை கிடைக்கும் எனக் கூறி அருளியதால், நாமும் விருத்தாசலம் சென்று ஆலயம் தொழுது பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திரும்புகலூர் : இத்திருத்தலம் நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ளது. நளச் சக்கரவர்த்தி சனி தோஷம் நீங்க தீர்த்த யாத்திரை செய்யத் தீர்மானித்து வந்து இந்தத் திருத்தலமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சனி பகவானின் அனுக்கிரகம் கிடைத்து, பின்னர் திருநள்ளாற்றில் விடுதலை ஆயிற்று. எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்ட பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ள இந்த ராகு தலத்தில்தான் நள மகராஜன், தனது இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்டு திருநள்ளாறு செல்வது மிகவும் சிறந்த பரிகாரமாக அமையும்.
2. திருகொள்ளிக்காடு
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாகச் சனீஸ்வரரின் அருள் பெற்ற ஒரே திருத்தலம் இந்த திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலமே ஆகும். திருத்துறைப் பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில், நால்ரோட்டில் இறங்கி மேற்கே செல்லும் ஆலத்தூர், விக்ரவாண்டியம் பாதையில் உள்ளது.
இது அக்னி பகவான் வழிபட்ட தலமாகும். மேற்கு திசையைப் பார்த்த சந்நிதி, வில்லேந்திய முருகர். இத்தலத்தில் சனி பகவான் வாயுதிக்கில் மகாலட்சுமி ஸ்தானத்தில் இருந்து, பொங்கு சனியாக அருள் தருகிறார்.
பொங்குசனி நடப்பவர்கள் அவசியம் தரிசித்தே ஆக வேண்டும்.
3. பவானி – கொடுமுடி
ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்திலும், ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும், சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.
4. குச்சனூர்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் குச்சனூர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் சனீஸ்வரபகவான் லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றியுள்ளார். இத்திருத்தலத்தின் மூலவர் இவரே. இந்தியாவிலேயே சனீஸ்வர பகவானுக்கான தனிக் கோவில் இதுதான். இத்தலம் பெரியாறும், சுரளியாறும் சங்கமித்து வரும் முல்லையாறு கரையில் உள்ளது.
எள்ளை விடச் சிறிய இலையையும், பூவையும் கொண்ட தலமரமாகிய விடத்தலை மரம். இந்த மரத்தின் கீழ் இறைவனைத் தியானித்த வண்ணம் சனி பகவான் காட்சி தருகிறார். சனீஸ்வரர் தமது மனைவி நீலாதேவியுடன் காட்சி தரும் உத்சவ விக்ரஹம இத்திருத்தலத்தில் உள்ளது. சனீஸ்வரர் சூரிய வம்சத்தில் பிறந்தவர் என்பதால் மூல ஸ்தான விக்ரஹத்திற்கு வைஷ்ணவ நெற்றிக்குறியான நாமம் இடுகிறார்கள்.
5. திருவாதவூர்
மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இது சனீஸ்வர பகவான் வழிபட்ட திருத்தலமாகும். சனீஸ்வரருக்குத் தனி சன்னிதி உள்ளது. மாண்டவ்ய முனிவரைச் சனீஸ்வரர் பற்ற, அதனால் கோபமுற்ற முனிவர், சனீஸ்வரரை முடமாகப் போகச் சாபமிட்டார். இந்த சாபம் நீங்கவே சுயம்புவாகத் தோன்றி, இத்திருத்தலத்தில் காட்சி தரும் இறைவன் வேதபுரீஸ்வரர், அம்பாள் வேதநாயகி ஆகியோரை வழிபட்டு சனீஸ்வர பகவான் தன் வாதத்தைப் போக்கி கொண்டார்.
சனியின் வாத நோய் குணமானதால்தான் இந்த ஊருக்குத் திருவாதவூர் எனப் பெயர் வந்தது. எனவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனிபகவான் அருள்பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற முடியும்.
திருநெல்லிக்காவல் : இத்தலத்திற்கு திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு என்ற இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். இத்தலம் பல சிறப்புகள் உடைய ஒரு அற்புதமான திருத்தலமாகும். சனி பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும்.
குரங்கணில் முட்டம் : இத்திருத்தலம் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் பாதையில், பாலாற்றைத் தாண்டி, தூசி என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும். சனி பகவானின் அதிதேவதையான எமன், காகம் வடிவில் வழிபட்ட தலம் இது.
திருப்புனவாசல் : அறந்தாங்கியிலிருந்து இத்திருத்தலத்தை அடையலாம். சுனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட தலம்.
மயிலாடுதுறை : இங்குள்ள அருள்மிகு மயூரநாத சுவாமி திருக்கோவிலில் எமன் வழிபட்ட லிங்கம் உள்ளது.
இடும்பாவனம் : இத்திருத்தலம் முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம் இது.
அகஸ்தியம்பள்ளி : இத்திருத்தலம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் பாதையில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட திருத்தலம் இது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம்.
பூந்தமல்லி : சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்னும் திருத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் விசேஷமானவர்.
சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல், குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது. இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது.
இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.
திருப்பைஞ்சீலி : திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்திருத்தலம் பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.
வருகிற டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனி பகவான் விருச்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு காலை 10.01க்கு மணிக்கு பிரவேசிக்கிறார். இதனால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த வாசக அன்பர்கள் பரிகாரம் செய்து நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
A.A.A.மதன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.