எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
அதிகாரிகளின் வேகமான பணியை பல்வேறு நலச் சங்கங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள் என்று அமைச்சர் கூறினார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி, வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, சமூக நலத்துறை அமைச்சர் வி. சரோஜா ஆகியோர் தொடர்ந்து 4–வது நாளாக மண்டலம் 9 மற்றும் 10–ல் மழை பாதிக்கபட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். நேற்று மாலை கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இரு மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தனர்.
நலச்சங்கங்கள் பாராட்டு
மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள். மேலும் பலத்த மழை காரணமாக சில இடங்களில் தேங்கிய தண்ணீரும் மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் உடனடியாக அகற்றியுள்ளீர்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்ததும், பல்வேறு பகுதிகளில் இருந்து நலச்சங்க நிர்வாகிகள் வந்து என்னை சந்தித்தனர்.அப்போது அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினரும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இரவு பகல் பாராது பணிகளை செய்தனர்.இவ்வளவு வேகமாக பணிகள் நடைபெறும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு பணியாற்றினீர்கள்.எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்று அந்த நலச் சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் வந்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள்.மக்களுடன் மக்களாக இருந்து அவர்களது கஷ்டங்களை உணர்ந்து செயல்படுங்கள் என்று அம்மா சொல்லி இருக்கிறார். அவர் எங்களுக்கு கற்று தந்த பாடம் இது. அம்மா வழியில் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம்.உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கிறோம் என்று அந்த நலச் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தேன்.
உங்களது (அதிகாரிகள்) பணியை மக்கள் பாராட்டுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள். எனவே உங்களது பணி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
முதலமைச்சர் முன் கூட்டியே பலமுறை ஆய்வு கூட்டம் நடத்தினார். வெள்ள நிவாரண பணிகளுக்காக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக ஒவ்வொரு பகுதிக்கும் நியமித்து பணியை முடுக்கிவிட்டார். கடந்த கால அனுபவங்களை எல்லாம் வைத்து பணிகளை செய்தோம். மேலும் மழை வரும் என்று சொல்கிறார்கள். மழையில் ஒரு தெருவில் கூட தண்ணீர் தேங்க கூடாது. அதற்கு இன்னும் வேகமாக செயல்படுங்கள் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். இந்த மண்டலத்தில் 181 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 650 டன் குப்பைகள் தினசரி அள்ளப்படுகிறது. 1500 கிலோ பிளிச்சிங் பவுடர் தௌி்க்கப்பட்டுள்ளது. 10 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.103 மருத்துவ முகாம்கள் மூலம் 7 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். போதுமான மருந்து இருப்பில் உள்ளது. மின் துறையை பொறுத்தவரை எந்தவித புகாரும் மக்களிடமிருந்து வரவில்லை. அனைத்து இடங்களிலும் மின் வினியோகம் சீராக உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்க 16 இடங்கள் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்க போதுமான சமையல் பொருட்கள் இருப்பில் உள்ளது என்று இந்த ஆய்வு கூட்டத்தில் அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.
80 ஆயிரம் மின்சார பில்லர் பாக்ஸ்
சென்னையில் 80 ஆயிரம் மின்சார பில்லர் பாக்ஸ்கள் உள்ளன. இதில் 6700 பில்லர் பாக்ஸ்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து 5900 பில்லர் பாக்ஸ்களை எடுத்து மாற்றி இருக்கிறோம். மீதியுள்ளவைகளும் மாற்றப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. தண்ணீர் வடிந்து காய்ந்ததும் உடனடியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
மின்சாரம் பற்றி ஏதேனும் புகார் செய்ய எனது வீட்டில் தனியாக போன் உள்ளது. அதில் தகவல் சொல்லலாம். என் கைபேசி நம்பருக்கும் போன் செய்யலாம். உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தமிழக முதலமைச்சர் சென்னை மாநகர பகுதியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து மழை நிவாரண பணிகளை கண்காணிக்கவும் துரிதபடுத்தவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 9 மற்றும் 10 மண்டலங்களில் கடந்த நான்கு நாட்களாக மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினோம். மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், மின்துறை, சுகாதாரத் துறை, காவல் துறை போன்ற துறைகளின் அலுவலர்கள் மிக சிறப்பாக நிவாரண பணிகளை மேற்கொண்டனர். இதற்காக எங்களது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்.இந்த வாரம் பெய்த மழையால் மண்டலம் 9 மற்றும் 10–ல் உள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து அடுத்து புயல் மற்றும் கனமழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளபட்டு தயார் நிலையில் உள்ளது.சுரங்கபாதைகளில் நீரை வெளியேற்ற போதுமான மோட்டார் பம்புகள், சரிந்து விழும் மரங்களை வெட்ட மரம் வெட்டும் இயந்திரங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்கவைக்க சிறப்பு மையங்கள், உணவு தயாரிக்கும் கூடங்கள், பொக்லைன் மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்கர் வாகனங்கள், போதுமான மருந்து மாத்திரைகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் ரவி, மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல நிர்வாக என்ஜினீயர்கள் பெரியசாமி, ஆர். சின்னதுரை, தி.நகர் பகுதி செயலாளர் டி.டி.பால்ராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.