எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் தயாரிப்பதற்காக அரிய புகைப்படங்கள் மற்றும் அவர் புரிந்த சாதனைகள் மற்றும் சிறப்பு தகவல்களை தெரிவிக்க வேண்டுமென அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்க கூட்டரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான, விழா மலர் குழு கூட்டம் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜூன் 30-ம் தேதி மதுரை மாவட்டத்தில் தொடங்கி இதுவரை 21 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, சென்னையில் சிறப்பாக நடத்தப்படவுள்ளதையொட்டி எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்ச் சமுதாயத்திற்கு தெரிவித்த அரிய பலகருத்துக்களை சேகரித்தும், தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக எம்.ஜி.ஆர் ஆற்றிய பல சாதனைகள் குறித்தும் விழா சிறப்பு மலர், குறும்படம் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு தயாரித்து வெளியிடப்படவுள்ளது.
எனவே, திரைப்படத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், உதயகுமார், நாஞ்சில் ப.க. அன்பழகன் மற்றும் விழா மலர்க்குழு உறுப்பினர்களையும் அன்னாரின் புகழை வெளிக்கொணரும் வகையில் வெளியிட தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலரில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துரைகளும், முக்கிய பிரமுகர்கள் எம்.ஜி.ஆரின் தனித்துவம் குறித்து வழங்கிய பிரத்யேக கட்டுரைகள், வெளியிட்ட சிறப்பு செய்திகள் மற்றும் பேட்டிகள் போன்ற தகவல்கள் அடங்கியிருத்தல் வேண்டும். இச்சிறப்பு மலர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டி இந்த விழா மலர் குழுவில் அரசு அதிகாரிகள், திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரை பற்றிய தனிச்சிறப்புகள், தமிழ்நாட்டிற்கு அவர் புரிந்த சாதனைகள், அவரைச் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை இக்குழுவிற்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் அரியபுகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் இக்குழுவிற்கு வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் எம்.ஜி.ஆர். ஆற்றிய சட்டமன்ற உரைகள் போன்ற செய்திகளோடும் இச்சிறப்பு மலர் அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செய்திமக்கள் தொடர்புத் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்
முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் நூற்றாண்டு விழா தொடர்பாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலரில் அமையவுள்ள வாழ்த்துரைகள், கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் குறித்து அமைச்சர் பெருமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநர் ஜெயகாந்தன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்கள் அருள், விசயராகவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கிய ராஜ், உதயகுமார், நாஞ்சில் அன்பழகன், மருது அழகுராஜ், செய்தி-மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர். எஸ்.பி.எழிலழகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.