முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு - டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி மீண்டும் ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் புகார்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் ....

கடந்த மாதம் 25-ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தீர்ப்பு எழுத தாமதம் ஆனதால்,  நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு தேதி வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார். அதன்படி, தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை நீதிபதி ஷைனி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு தயாராகாததால் மீண்டும் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு தயாராவதற்கு மேலும் 3 வார கால அவகாசம் தேவைப்படுகிறது எனக் கூறிய நீதிபதி, டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து