முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி, டிராவிட் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை - ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் டிராவிட்டும், டோனியும் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்பாட்பிக்சிங் புகார்

2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியின்போது ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை விடுவித்து டெல்லி கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.
தடையை உறுதி செய்தது

இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை எதிர்த்தும் ஸ்ரீசாந்த் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது தடையை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்த வழக்கில் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்து கேரள ஐகோர்ட்டின் பெஞ்ச் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆயுட்கால தடையை நீக்க கோரி கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக ஸ்ரீசாந்த் சமீபத்தில் அறிவித்தார்.

ஆதரவு அளிக்கவில்லை

அதோடு ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் கிரிக்கெட் வாரியம் தனக்கு எதிராக மட்டுமே ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரத்தில் டிராவிட்டும், டோனியும் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் அனுப்பவில்லை

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் கூறியதாவது:-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக இருந்த ராகுல் டிராவிட் என்னை பற்றி நன்கு அறிந்தவர். அப்படி இருந்தும் அவர் எனக்கு ஆதரவு தரவில்லை. டோனிக்கு உணர்வுபூர்வமாக தகவல் அனுப்பி இருந்தேன். அதற்கும் அவர் பதில் அனுப்பவில்லை. டெல்லி போலீசார் 16 அல்லது டாப் 10 இந்திய வீரர்கள் மீது குற்றம்சாட்டி இருந்தனர்.

வேறு நாட்டுக்காக ...

இதில் 6 பேர் பெயர் வெளியாகி இருந்ததால் கிரிக்கெட் விளையாட்டை உண்மையாக பாதித்து இருக்கும். பி.சி.சி.ஐ. தேசிய அணி அல்ல. தனியார் நிறுவனம். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விளையாடுவேன். விளையாட அனுமதிக்காவிட்டால் வேறு நாட்டுக்காக ஆடுவேன். இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து