முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக விஜய் மல்லையா: அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தொழிலதிபர் விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்தியாவிற்கு நாடு கடத்திக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றம் ஏப்ரலில் ஜாமினில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து