முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 307 பேர் கைது: சி.பி.ஐ தகவல்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 307 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோரிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

 கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதியன்று ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கியவர்கள் சட்டவிரோதமாகவும் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர். இது தொடர்பாக சி.பி.ஐ பலரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை மொத்தம் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 180 பேர் என்கிறது சி.பி.ஐ. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து