எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நடிகர் கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
நோட்டுகள் செல்லாது
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.தலைமை அலுவலகமான கமலாயத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெளிநாட்டில் வரிக்கட்டாமல் சொத்து சேர்க்கப்பட்ட பதுக்கல் பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு 2013 - 14 ம் ஆண்டில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது. 2013 முதல் 2015-ம் ஆண்டு வரையில் சர்வதேச அமைப்புகள் அளித்த அறிக்கையின்படி உயர்மதிப்பு நோட்டுகள்தான் கருப்பு பணமாக வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடவடிக்கை
அதன் அடிப்படையில் தான் ரூ.1000, ரூ.500 சட்டப்படி பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் வங்கி கணக்கில் பதுக்கப்பட்டிருந்த பணம் திரும்ப வந்தது. மேலும் வெளிப்படையான முறையில் பண பரிமாற்றம் நடந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லது. இதன் முலம் யார் யார் வரி செலுத்துகின்றனர் என்பது தெரியவரும். தற்பொழுது பண பரிமாற்றம் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. பண மதிப்பிழப்பு மீதான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அரசு நடவடிக்கை
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசு திட்டங்களிலிருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பயன்பாடு அதிகளவில் இருந்தது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பயங்கரவாதிகளிடம் இருந்த பணம் முடங்கியது. இதனால் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 4 ஆயிரத்திலிருந்து 600 ஆக குறைந்தது. பெரிய செலவுகளை ரொக்கமாக மேற்கொண்டால் யாருக்கும் நல்லதல்ல. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கறுப்புப்பணத்தை மீட்க...
படிப்படியாக ரொக்கப்பண உபயோகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கவும், கறுப்புப்பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.500, ரூ.1000 நீக்கத்தை முன்கூட்டியே அறிவித்திருந்தால் பணம் பதுக்கியிருப்பவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள். ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வங்கிக்கு வந்த அனைத்து பணமும் வெள்ளை பணம் அல்ல. பணமதிப்பிழப்பு திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
வேதனையைத் தருகிறது
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வளவு பணத்தை புழக்கத்தில் விடுவது என்பதை ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு முடிவு செய்வது அல்ல. படிப்படியாக ரொக்க உபயோகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து அரசு தொடர்ந்து விளக்கி வருகிறது. மன்மோகன் சிங் கூறிய கருத்து மனத்திற்கு வேதனையைத் தருகிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது ஊழல் நடந்து கொண்டே இருந்தது. தனது ஆட்சியில் நடந்த ஊழலை மன்மோகன் சிங் கண்டும் காணாமல் இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் காற்று, நிலம் என பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. பல்வேறு ஊழல்களை கண்டுகொள்ளாமல் ஆட்சி நடத்திய மன்மோகனின் விமர்சனம் வேதனை அளிக்கிறது. பிரதமராக இருந்த போது மன்மோகன்சிங் ஒரு கருவியாகவே செயல்பட்டார்.
முழுமையாக அறிந்து ....
கருப்பு பணத்தை ஆதரிப்பவர்களே, கருப்பு தினமாக அனுசரிப்பார்கள். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். வருமானத்திற்கு அதிகமான பணம் குறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது பா.ஜ.தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், சென்னை கோட்டப்பொருப்பாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.