எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
64வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா திருச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் "கூட்டுறவுகளை எண்முறையாக்கல் மூலம் மக்களை ஆளுகையுடையோராக்கல்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு 7நாட்களும் கீழ்க்காணும் தலைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என மண்டல இணை பதிவாளர் கே.சி,ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கூட்டுறவு வாரவிழா
14ம்தேதி அன்று முதல் நாள் "கூட்டுறவுகள் மூலம் நல்லாளுகையும் தொழில் முறையாக்கமும்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் காலை 9.00மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு கொடி ஏற்றி கூட்டுறவு உறுதிமொழி ஏற்கவும் அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் திருச்சிராப்பள்ளி நகர கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் கூட்டுறவு கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடும் விழா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாலை 4.00மணியளவில் உறையூர் தேவாங்க நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
15ம்தேதி இரண்டாம் நாள் "உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில், புலிவலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் புலிவலம் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ முகாம் காலை 7.00மணியளவில் நடைபெறவுள்ளது.
16ம் தேதி மூன்றாம் நாள் "கூட்டுறவு மேம்பாட்டிற்கு வழிகோலும் சட்டமியற்றல்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் காலை 10.00மணியளவில் கூட்டுறவு இயக்கம் பற்றிய கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் ஸ்ரீநிவாசா ஹாலில் நடைபெறவுள்ளது. 17ம்தேதி நான்காம் நாள் "பொதுத்துறையிலும் தனியார்துறையிலும் கூட்டுறவின் கூட்டாண்மை" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களில் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. 18ம் தேதி ஐந்தாம் நாள் "தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனை மூலம் நிதி உட்படுத்துதலில் கூட்டுறவுகளின் பங்கு" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் மற்றும் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவ மாணவியர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பல்துறை அலுவலக கட்டிடம், காஜாமலை பகுதிகளில் காலை 8.00மணியளவில் சுத்தம் செய்யப்படவுள்ளது.
மாலை 3.00மணியளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோருக்கு மக்கள் மன்றம் வளாகத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் நிதி உட்படுத்துதலில் கூட்டுறவுகளின் பங்கு தொடர்பான பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. 19ம் தேதி ஆறாம் நாள் "நலிவடைந்தோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குமான கூட்டுறவுகள்" என்ற தலைப்பின் கீழான நிகழ்ச்சியில் காலை 9.00மணியளவில் அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் நுகர்வோர் மேளா நடத்தப்படவுள்ளது. 20ம் தேதி ஏழாம்நாள் "திறன் மேம்பாட்டில் முதன்மைப் பங்காளராகக் கூட்டுறவு" என்ற தலைப்பின் கீழ் காலை 8.00மணியளவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரத்ததான முகாமும், இப்கோ நிறுவனம் மூலம் ஸ்ரீ விநாயகமூர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண் தொழில்நுட்பம் விவசாயிகள் திறன் அறியசெய்தல் தொடர்பான பயிற்சியும், நடைபெறவுள்ளது.
மாடித்தோட்டம்
மாலை 4.00மணியளவில் நகர்புற குடும்ப தலைவிகளுக்கு மாடித்தோட்டம் மற்றும் கீரைத்தோட்டம் அமைத்தல் தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்டவாறு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக வாரவிழாக்குழு கூட்டுனர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கே.சி.இரவிச்சந்திரன் தெரிவித்தார் என திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.