எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 187-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நேற்று ஒரேநேரத்தில் வருமான வரிசோதனை நடந்தது. 1,900 அதிகாரிகள் ஈடுபட்ட இந்த அதிரடி சோதனையில், தினகரன், நடராஜன், இளவரசி மகன் வீடுகள் மற்றும் அலுவலகங்களும் அடக்கம். வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 187-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த நேற்று நடைப்பெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் முக்கியமான ஆவணங்கள் ஏராளமாக சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது தொடர்பான சோதனை தொடர்ந்து நடைபெறும் என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட சோதனை தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் நடந்தது. சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,900 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீனி வெட்ஸ் மஹி என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நடந்த இடங்கள்
சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு, ஈக்காடு தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம், ஈக்காடு தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் டாக்டர் கிருஷ்ணப்பிரியா வீடு. நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு, பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டு, கர்நாடக மாநில அ.தி. மு.க. அம்மா அணி செயலாளராக இருக்கும். புகழேந்தியின் பெங்களூரு முருகேஷ்பாளையம் முனுசாமப்பா லே-அவுட் பகுதியில் உள்ள வீடு.
டி.டி.வி.தினகரனின் வீடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் டி.டி.வி.தினகரனின் வீடு, மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் வீடு, தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங் கடேஷ் வீடு, மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள தினகரன் அணி ஆதரவாளரும் , அ.தி.மு.க. அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான எஸ்.காமராஜ் வீடு, மன்னார்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளையின் வீடு, திருவாரூர் அருகே கீழ திருப்பாலங்குடியில் தினகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு, தஞ்சை வடக்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வேலு கார்த்திகேயன் வீடு.
சசிகலாவின் கணவர்...
சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியின் சம்பந்தியும் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயருமான கலியபெருமாளின் வீடு, திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டியில் உள்ள அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பி யும், தினகரன் அணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயனின் வீடு, அறந்தாங்கி அருகே நெற்குப்பையில் உள்ள பரணி கார்த்திகேயனின் வீடு, தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் வீடு, சசிகலாவின் உறவினர் மறைந்த மகாதேவன் வீடு, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இல்லத்தில் சோதனை
கர்சன் எஸ்டேட், மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீடு, ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும், வழக்கறிஞருமான பாலுச்சாமி வீடு, திருத்துறைப்பூண்டியில் திவாகரன் நண்பரான ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநர் நடேசன் வீடு, கோடநாடு எஸ்டேட் கணக்கை நிர்வகிக்கும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜாஸ் சினிமா அலுவலகம்
திருச்சியில் ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லம், மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீடு, வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் வடகாட்டில் வெங்கட் வீடு, சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளில் நடந்தது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் நிறுவனமாக வளர்ந்தது ஜாஸ் சினிமாஸ். இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜாஸ் நிறுவனத்தில் நேற்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல நூறு பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வருமான வரித்துறை விளக்கம்
நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் வருமாறு:-
சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள். இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டி.வி.க்கு தொடர்புடையதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோதனை தொடரும்...
நேற்று நடைப்பெற்ற வருமான வரி சோதனையில், பல இடங்களில் இருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலா அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டிலும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்களின் மதிப்பீட்டை கணக்கீடும் பணி தற்போது நடைபெறுகிறது. ஆகையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் விவரங்களை உடனே தெரிவிக்க இயலாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் வருமான வரித்துறையினரின் சோதனையும் விசாரணையும் தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திவாகரன்
185க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சசிகலா சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில் நேற்று அதிகாலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்தது.
கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஐ.டி ரெய்டை அடுத்து திவாகரன் வீட்டுக்கு முன், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்தனர். இதனை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், திவாகரனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
திருமணத்திற்கு செல்வது போல் ரெய்டு !
சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ள திருமணத்திற்கு செல்வது போன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
வருமானவரித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநேரத்தில் 6 வருமானவரித்துறை ஆணையர்கள் தலைமையில் 1,900 அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 1000 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருவாரூரில் 12க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. “ஸ்ரீனி வெட்ஸ் மஹி” என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். இதற்காக வாடகைக் கார்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் அதிகாரிகள் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.