எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தேனி மாவட்டத்தில் வைகை அணை, நாகலார் ஒடை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:-
தடுப்பணைகள்
போடிநாயக்கனூர் வட்டம், பூதிபுரம் கிராமம், வலையாற்றின் குறுக்கே மாமரத்துவயல் அருகிலும், நாட்டாமைதோப்பு அருகிலும் இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்படும். உத்தமபாளையம் வட்டம், தேவாரம் கிராமத்தில் பிள்ளையார் ஊத்து ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்கப்படும் ஆண்டிபட்டி வட்டம், கடமலைகுண்டு கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி வட்டம், வள்ளல்நதி கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி வட்டம், எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் நாகலார் ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
போடிநாயக்கனூர் வட்டம், மதுரை வீரன் கோவில் அருகே அணைக்கரைபட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமத்தில் புல எண்.683/2 அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமத்தில் புல எண்.1218 அருகே சின்னாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், மாணிக்கபுரம் அருகே சுத்த கங்கை ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே மஞ்சளாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
சிமெண்ட் வாய்க்கால்...
பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புது அணைக்கட்டு கால்வாய் தூர் வாரப்பட்டு, மதகுகளைப் புதியதாகக் கட்டி, மஞ்சளாற்றில் வரும் தண்ணீர் எவ்வித தடையுமின்றி மத்துவார்குளம் கண்மாயை சென்று அடையும் வகையில் சிமெண்ட் வாய்க்காலாக மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் 474 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி உறுதி செய்யப்படும். தேனி வட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அல்லிநகரம் மீறுசமுத்திரம் கண்மாயை ஆழப்படுத்தி அதன் கொள்ளளவு உயர்த்தப்படும்.
சிறுபாலங்கள்
தேசிய நெடுஞ்சாலை 49-ல் கி.மீ.50/6-58/0 அதாவது ஆண்டிபட்டி கணவாய் முதல் தி.சுப்புலாபுரம் வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை 49-ல் கி.மீ.74/0 - 76/450 மற்றும் 77/6 - 80/0 அதாவது தேனி நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியிலிருந்து போடி விலக்கு வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். ஆண்டிபட்டி - மயிலாடும் பாறை - தங்கம்மாள்புரம் சாலை வழி வாய்கால்பாறை மூலக்கடை சாலையில் கிமீ. 7 / 2 மற்றும் கிமீ. 1 / 10 ஆகிய இடங்களில் இரண்டு உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும். போடி - தேவாரம் - லட்சுமி நாயக்கன்பட்டி வழியாகச் செல்லும் திம்மிநாயக்கன்பட்டி சாலையில் கி.மீ. 4 / 6 (i) மற்றும் 4 / 6 (ii) ஆகிய இடங்களில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்படும்.
கையடக்கக் கணினிகள்
தேனி மாவட்டம், பெரிய குளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி உதவியுடன் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டயாலிசிஸ், எண்டோஸ்கோப், மன நல சிறப்பு பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் அமைக்கப்படும். மூப்பியல் பிரிவு ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 162 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களைப் பதிவு செய்திட கையடக்கக் கணினிகள் வழங்கப்படும்.
கம்பம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் உள்ளிட்ட நவீன ஆய்வகக் கருவிகள் வழங்கப்படும். வீரபாண்டி அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். வீரபாண்டி கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி மேம்படுத்தப்படும். மயிலாடும்பாறை மற்றும் கடமலைக்குன்று வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.