எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தேனி மாவட்டத்தில் வைகை அணை, நாகலார் ஒடை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:-
தடுப்பணைகள்
போடிநாயக்கனூர் வட்டம், பூதிபுரம் கிராமம், வலையாற்றின் குறுக்கே மாமரத்துவயல் அருகிலும், நாட்டாமைதோப்பு அருகிலும் இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்படும். உத்தமபாளையம் வட்டம், தேவாரம் கிராமத்தில் பிள்ளையார் ஊத்து ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்கப்படும் ஆண்டிபட்டி வட்டம், கடமலைகுண்டு கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி வட்டம், வள்ளல்நதி கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி வட்டம், எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் நாகலார் ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
போடிநாயக்கனூர் வட்டம், மதுரை வீரன் கோவில் அருகே அணைக்கரைபட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமத்தில் புல எண்.683/2 அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமத்தில் புல எண்.1218 அருகே சின்னாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், மாணிக்கபுரம் அருகே சுத்த கங்கை ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே மஞ்சளாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
சிமெண்ட் வாய்க்கால்...
பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புது அணைக்கட்டு கால்வாய் தூர் வாரப்பட்டு, மதகுகளைப் புதியதாகக் கட்டி, மஞ்சளாற்றில் வரும் தண்ணீர் எவ்வித தடையுமின்றி மத்துவார்குளம் கண்மாயை சென்று அடையும் வகையில் சிமெண்ட் வாய்க்காலாக மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் 474 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி உறுதி செய்யப்படும். தேனி வட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அல்லிநகரம் மீறுசமுத்திரம் கண்மாயை ஆழப்படுத்தி அதன் கொள்ளளவு உயர்த்தப்படும்.
சிறுபாலங்கள்
தேசிய நெடுஞ்சாலை 49-ல் கி.மீ.50/6-58/0 அதாவது ஆண்டிபட்டி கணவாய் முதல் தி.சுப்புலாபுரம் வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை 49-ல் கி.மீ.74/0 - 76/450 மற்றும் 77/6 - 80/0 அதாவது தேனி நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியிலிருந்து போடி விலக்கு வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். ஆண்டிபட்டி - மயிலாடும் பாறை - தங்கம்மாள்புரம் சாலை வழி வாய்கால்பாறை மூலக்கடை சாலையில் கிமீ. 7 / 2 மற்றும் கிமீ. 1 / 10 ஆகிய இடங்களில் இரண்டு உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும். போடி - தேவாரம் - லட்சுமி நாயக்கன்பட்டி வழியாகச் செல்லும் திம்மிநாயக்கன்பட்டி சாலையில் கி.மீ. 4 / 6 (i) மற்றும் 4 / 6 (ii) ஆகிய இடங்களில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்படும்.
கையடக்கக் கணினிகள்
தேனி மாவட்டம், பெரிய குளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி உதவியுடன் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டயாலிசிஸ், எண்டோஸ்கோப், மன நல சிறப்பு பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் அமைக்கப்படும். மூப்பியல் பிரிவு ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 162 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களைப் பதிவு செய்திட கையடக்கக் கணினிகள் வழங்கப்படும்.
கம்பம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் உள்ளிட்ட நவீன ஆய்வகக் கருவிகள் வழங்கப்படும். வீரபாண்டி அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். வீரபாண்டி கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி மேம்படுத்தப்படும். மயிலாடும்பாறை மற்றும் கடமலைக்குன்று வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.