எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி : தமிழக அரசு சார்பில் நேற்று தேனியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க உருவான பிறகு தி.மு.க. எலியாக மாறிவிட்டது என்றார்.
தேனியில் நேற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது எத்தனை எதிரிகள் வேல் எரிந்தாலும், துரோகிகள் வாள் வீசினாலும் அவைகள் ஆண்டவன் அருளாலும், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மாக்களின் ஆசியினாலும் அனைத்தும் தூள்தூளாகி விடும்.
எலியாக மாறிவிட்டது
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று அறிவித்த அம்மாவின் ஆணைப்படி தற்போது பல மாவட்டங்களில் நடைபெற்று தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. 1967ல் அண்ணாவின் தலைமையில் தி.மு.க ஆட்சி நடைபெற்று வந்தது. 1969ல் அண்ணா மறைவிற்கு பின் யார் முதல்வராக பொறுப்பேற்பது என்று எதிர்பார்த்தபோது எல்லோருடைய எண்ணமும் புரட்சித்தலைவர் மீது இருந்தது. ஆனால் நல்லாட்சி நடத்துவார் என்ற நம்பிக்கையில் கருணாநிதியை முதல்வராக்கினர். ஆனால் கருணாநிதி தி.மு.கவை குடும்ப சொத்தா மாற்றிவிட்டார். அப்போது புலியாக இருந்த தி.மு.க எம்.ஜி.ஆர் விலகி அ.தி.மு.கவை உருவாக்கிய பின் எலியாக மாறிவிட்டது.
பல திட்டங்கள் அறிவிப்பு
எம்.ஜி.ஆர் தனது ஆட்சியில் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட பல தன்னிறைவு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் கழகத்தை கட்டிக்காத்த அம்மா, அரசியல் புரட்சியால் வறுமையை ஒழித்தல், புனித யாத்திரை செல்ல மும்மதத்தினருக்கும் சலுகைகள், ரம்ஜான் மாத நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி, ஏழை எளியோரின் பசியை போக்க அம்மா உணவகம் அமைத்தல், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கறவைமாடுகள் வழங்குதல் என பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
27 ஆண்டுகள்
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர் சிலை அமைத்தல், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் முல்லை பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான்பென்னிகுயிகிற்கு மணிமண்டபம் அமைத்தல், முல்லைபெரியார் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து சட்ட போராட்டம் செய்து 142 அடியாக உயர்த்தியது என அம்மாவின் தன்னலமற்ற ஆட்சியால் 16 லட்சம் உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக மாறியது. மேலும் அ.தி.மு.க உருவானதிலிருந்து இதுவரை தமிழக மக்களின் பேராதரவோடு 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறது.
தூக்கமில்லை
அவருடைய மறைவுக்கு பின் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவது சிலருக்கு தாங்கமுடியவில்லை, சிலருக்கு தூக்கமில்லை ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தவர்களின் கணக்கு தப்பாகிவிட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றார். பசும்பொன் தேவரின் உருவசிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை பெற பிரச்னை செய்தனர். அதனால் அவற்றை மாவட்ட ஆட்சியர் மூலம் அணிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் நமக்கு கிடைத்து விடும் என்றார்.
குட்டிக்கதை
ஒரு முனிவரிடம் ஒருவர் வந்தார். தனது பாவத்தை போக்க வழி சொல்லுமாறு கேட்டார். முனிவர் என்ன பாவம் செய்தாய் என்று கேட்டார். தான் நிறைய அவதூறு பேசுவதாக கூறினார். உடனே முனிவர் உன் வீட்டில் தலையணை இருந்தால் எடுத்துவந்து நடுவீதியில் நின்று கொண்டு உள்ளிருக்கும் பஞ்சை எடுத்து பறக்கவிட்டு விட்டு வா என்றார். குழம்பியவர் முனிவர் சொன்னமாதிரி செய்து விட்டு வந்து தன் பாவம் தீர்ந்து விட்டதா என்று ஆர்வமாக கேட்டார். முனிவர் நான் பஞ்சை பறக்க விட்டால் பாவம் தீர்ந்து விடும் என்று சொல்லவில்லையே என்றும், தற்போது பறக்கவிட்ட பஞ்சை மீண்டும் ஒன்று சேர்த்து கொண்டு வா என்றார். நாலாபக்கமும் பறந்து போன பஞ்சை எப்படி கொண்டு வர முடியும் என்று வந்தவர் கேட்க, அதுபோல உன் பாவமும் தீராது என்று முனிவர் தெரிவித்தார். இது யாருக்காக கூறுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.