எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி : தமிழக அரசு சார்பில் நேற்று தேனியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க உருவான பிறகு தி.மு.க. எலியாக மாறிவிட்டது என்றார்.
தேனியில் நேற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசும்போது எத்தனை எதிரிகள் வேல் எரிந்தாலும், துரோகிகள் வாள் வீசினாலும் அவைகள் ஆண்டவன் அருளாலும், எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மாக்களின் ஆசியினாலும் அனைத்தும் தூள்தூளாகி விடும்.
எலியாக மாறிவிட்டது
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று அறிவித்த அம்மாவின் ஆணைப்படி தற்போது பல மாவட்டங்களில் நடைபெற்று தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. 1967ல் அண்ணாவின் தலைமையில் தி.மு.க ஆட்சி நடைபெற்று வந்தது. 1969ல் அண்ணா மறைவிற்கு பின் யார் முதல்வராக பொறுப்பேற்பது என்று எதிர்பார்த்தபோது எல்லோருடைய எண்ணமும் புரட்சித்தலைவர் மீது இருந்தது. ஆனால் நல்லாட்சி நடத்துவார் என்ற நம்பிக்கையில் கருணாநிதியை முதல்வராக்கினர். ஆனால் கருணாநிதி தி.மு.கவை குடும்ப சொத்தா மாற்றிவிட்டார். அப்போது புலியாக இருந்த தி.மு.க எம்.ஜி.ஆர் விலகி அ.தி.மு.கவை உருவாக்கிய பின் எலியாக மாறிவிட்டது.
பல திட்டங்கள் அறிவிப்பு
எம்.ஜி.ஆர் தனது ஆட்சியில் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட பல தன்னிறைவு திட்டங்களை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் கழகத்தை கட்டிக்காத்த அம்மா, அரசியல் புரட்சியால் வறுமையை ஒழித்தல், புனித யாத்திரை செல்ல மும்மதத்தினருக்கும் சலுகைகள், ரம்ஜான் மாத நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி, ஏழை எளியோரின் பசியை போக்க அம்மா உணவகம் அமைத்தல், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கறவைமாடுகள் வழங்குதல் என பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
27 ஆண்டுகள்
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர் சிலை அமைத்தல், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வரும் முல்லை பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான்பென்னிகுயிகிற்கு மணிமண்டபம் அமைத்தல், முல்லைபெரியார் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து சட்ட போராட்டம் செய்து 142 அடியாக உயர்த்தியது என அம்மாவின் தன்னலமற்ற ஆட்சியால் 16 லட்சம் உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக மாறியது. மேலும் அ.தி.மு.க உருவானதிலிருந்து இதுவரை தமிழக மக்களின் பேராதரவோடு 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறது.
தூக்கமில்லை
அவருடைய மறைவுக்கு பின் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவது சிலருக்கு தாங்கமுடியவில்லை, சிலருக்கு தூக்கமில்லை ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தவர்களின் கணக்கு தப்பாகிவிட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றார். பசும்பொன் தேவரின் உருவசிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை பெற பிரச்னை செய்தனர். அதனால் அவற்றை மாவட்ட ஆட்சியர் மூலம் அணிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் நமக்கு கிடைத்து விடும் என்றார்.
குட்டிக்கதை
ஒரு முனிவரிடம் ஒருவர் வந்தார். தனது பாவத்தை போக்க வழி சொல்லுமாறு கேட்டார். முனிவர் என்ன பாவம் செய்தாய் என்று கேட்டார். தான் நிறைய அவதூறு பேசுவதாக கூறினார். உடனே முனிவர் உன் வீட்டில் தலையணை இருந்தால் எடுத்துவந்து நடுவீதியில் நின்று கொண்டு உள்ளிருக்கும் பஞ்சை எடுத்து பறக்கவிட்டு விட்டு வா என்றார். குழம்பியவர் முனிவர் சொன்னமாதிரி செய்து விட்டு வந்து தன் பாவம் தீர்ந்து விட்டதா என்று ஆர்வமாக கேட்டார். முனிவர் நான் பஞ்சை பறக்க விட்டால் பாவம் தீர்ந்து விடும் என்று சொல்லவில்லையே என்றும், தற்போது பறக்கவிட்ட பஞ்சை மீண்டும் ஒன்று சேர்த்து கொண்டு வா என்றார். நாலாபக்கமும் பறந்து போன பஞ்சை எப்படி கொண்டு வர முடியும் என்று வந்தவர் கேட்க, அதுபோல உன் பாவமும் தீராது என்று முனிவர் தெரிவித்தார். இது யாருக்காக கூறுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.